
கூட்டணிக்காக யாரும் எங்களை நாடவில்லை: பாஜக
கூட்டணிக்காக பாஜகவை நோக்கி யாரும் வரவும் இல்லை, யாரையும் நாங்கள் அணுகவும் இல்லை என்று அக் கட்சியி்ன் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. சட்டசபை [^] தேர்தலில் இளைஞர்கள், மாணவர்கள் [^], மக்கள் சக்தியை கொண்டு சொந்த பலத்தில் பாஜக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையும்.
கூட்டணிக்காக பாஜகவை நோக்கி யாரும் வரவும் இல்லை. யாரையும் நாங்கள் அணுகவும் இல்லை.
வரும் நவம்பர் முதல் அடுத்தாண்டு ஜனவரி வரை தமிழகம் [^] முழுவதும் யாத்திரை நடத்தி, பின்னர் சென்னையில் பல லட்சம் பேரை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தப்படும்.
இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பதில்லை. சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகிறது. இதனால் 85 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்களை திரட்டி கல்வி உதவித் தொகை கோரி போராட்டம் [^] நடத்துவோம் என்றார்.