தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டத் தீர்மானங்கள்
August 24, 2010 15:55:08
தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. தமிழக முதல்வரும் தி.மு.க., தலைவருமான கருணாநிதி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் க.அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோரும்,
தி.மு.க., எம்.பி.,க்கள் மு.க.அழகிரி, ராசா, தயாநிதிமாறன், பழனிமாணிக்கம், காந்தி செல்வன், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆதிசங்கர், ஜெயத்துரை, விஜயன் ஜின்னா, ஹெலன் டேவிட், அப்துல் ரகுமான், வசந்தி ஸ்டான்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திருத்தம் ஒன்றை மத்திய அரசு மேற்கொள்ள முடிவெடுத்து, வரைவு சட்ட முன்வடிவு ஒன்றையும் தயாரித்து மாநில அரசுகளுக்கு அனுப்பியது. முதல்- அமைச்சர் கருணாநிதி அந்த சட்ட முன்வடிவு குறித்து பல்வேறு ஐயப்பாடுகளை எழுப்பி, அது மாநில அரசுகளின் வரி விதித்திடும் உரிமையைப் பெருமளவுக்கு நீர்த்துப் போகச் செய்வதாகவும், கூட்டாட்சித் தத்துவதற்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்து, விரிவாக கடிதங்கள் அனுப்பியதோடு, மத்திய அரசு கூட்டிய கூட்டங்களில் தமிழகத்தின் நிதி அமைச்சர் அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், வணிகவரித்துறை அமைச்சர் உபயதுல்லா ஆகியோர் கலந்து கொண்டு அவர்களும் மாநில அரசின் அணுகுமுறை பற்றிய விளக்கங்களை வழங்கியுள்ளனர்.
அதன் அடிப்படையில் மத்திய அரசு சட்ட முன் வடிவை திருத்தி அமைத்தது, திருத்தி அமைக்கப்பட்ட சட்ட முன்வடிவும், பிழையான செயல்திட்டமும் நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமில்லாத கால அட்டவணையும் கொண்டதாக அமைந்திருந்தது.
புதிய சட்டத்திருத்தத்தினால், சராசரி மனிதன் பயன்படுத்தும் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி உயரும் என்றும், ஆடம்பரப் பொருள்களின் மீதான வரி குறையும் என்றும், குறைந்த வருவாய் உடைய மக்கள் தொகை நிறைந்துள்ள நமது நாட்டில் புதிய வரிவிதிப்பு முறை பிற்போக்கானது எனக்கருதப்படும் என்றும், பல்வேறு முனைகளிலும் வேறுபாடு நிறைந்த தன்மைகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய நாடாகத் திகழும் இந்தியத் திருநாட்டில் ஒரே மாதிரியான தேசிய வரியை விதிப்பது என்பது பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு வழி வகுக்கும் என்றும், சிறுகுறு தொழில் முனைவோர்க்கு பாதிப்பை உருவாக்கும் என்றும், மதிப்புக் கூட்டு வரிக்கு மாறிய சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பாக, ஜனநாயக ரீதியிலான விரிவான கலந்தாலோசனையும், அதில் அனைத்து மாநிலங்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது என்றும், மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்குதல் என்பது கானல் நீராகவே முடிகிறது என்றும் கருத்துக்கள் தெரிவித்து முதல் -அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியிருந்தார்.
இவற்றிற்கு பிறகு, ஒரு மனதான ஒப்புதலின்றி சரக்குகள் மற்றும் சேவைகள் வரி தொடர்பான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வது சாத்தியமாகாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அண்மையில் அறிவித்திருப்பது நமக்கு மிகுந்த ஆறுதலை அளிப்பதாக அமைந்திருக்கிறது.
மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவிப்பை கழக எம்.பி.க்களின் இக்கூட்டம் மனமுவந்து வரவேற்று, நன்றி செலுத்துவதோடு இறுதியாகவும், உறுதியாகவும் கல்வி, வரி விதிப்பு போன்ற துறைகளில் மாநில அரசின் உரிமைகளைப் பாதிக்காத அளவுக்கு மத்திய அரசின் அணுகுமுறைகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது சம்பந்தமான வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, இந்திய மருத்துவக் குழுமம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு 2011-2012ஆம் ஆண்டு முதல் அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.
இதனை அறிந்ததும் முதல் -அமைச்சர் கருணாநிதி கிராமப்புற மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு தமிழக அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு, பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வினை 2007-2008-ஆம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது என்றும், அதன் காரணமாக சமூக மற்றும் பொருளாளதார நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர் என்றும், அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு முறை மாநிலங்கள் கல்வித் துறையை நிர்வாகம் செய்வதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது என்றும், தமிழக அரசு நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தி வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும், சமூக நீதியின் தாயகமான தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன்கள் பாதிப்புக்குள்ளாகும் என்றும் கருத்து தெரிவித்து, பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்து நல்ல முடிவு ஒன்றை மேற்கொள்ளுமாறு கேட்டு, இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் ஆகியோருக்கு 15-8-2010 அன்று கடிதம் எழுதினார்.
இதனையடுத்து, மருத்துவப்படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்துவது என்ற திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாகவும், இது குறித்து அனைத்து மாநில அரசுகளுடனும் விரிவான விவாதம் நடத்த இருப்ப தாகவும், மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதல்- அமைச்சர் கருணாநிதி விடுத்த கோரிக்கையினையொட்டி, உரிய நேரத்தில் சரியான முடிவெடுத்து, தமிழகத்தில் சமூக நீதிக்குச் சேதம் ஏற்படாமல் தடுத்த மத்திய அரசுக்கு, கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு, அகில இந்திய அளவில் பொதுநுழைவுத் தேர்வு என்பதை நிரந்தரமாக ரத்து செய்து அறிவித்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறது.
இலங்கையில் நடைபெற்ற போரின் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்குச் சென்று வசிக்கின்ற வாழ்வாதாரங்களை இன்னமும் சிங்கள அரசு செய்து தராமல் காலம் கடத்தி வருகிறது. இடம்பெயர்ந்த தமிழர்களின் மறுவாழ்வுக்காக இந்திய அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கின்ற அதே நேரத்தில், இந்திய அரசின் கருத்துக்கு மாறாக இலங்கை அரசு இடம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினையில் இன்னும் மந்த நிலையில் செயல்படுவதை இந்தக் கூட்டம் சுட்டிக்காட்டுவதோடு - உடன் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு உரிய வழி காண வேண்டுமென்று இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
Source:sivajitv.com
Tuesday, August 24, 2010
Monday, August 23, 2010
Who accept the leadership of dmdk with only alliance
மதுராந்தகம் : தே.மு.தி.க., கட்சியின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளப்படும் என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் கிராமத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச திருமண மண்டபம் கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்டச் செயலர் ரமேஷ் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
திருமண மண்டபத்தை திறந்து வைத்து, ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைத்து விஜயகாந்த் பேசியதாவது:மாமண்டூர் மக்களுக்காக திருமண மண்டபம் கட்டியுள்ளேன். இதை இடிக்க தாசில்தார் வந்தார். அமைச்சரும், கலெக்டரும் மண்டபத்தை இடிக்க கூறுகின்றனர். லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் செயல்படுகின்றனர். மண்டபத்தை மக்களுக்கே அர்ப்பணிக்கிறேன். என் சொந்த செலவில் ஏழை மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர், ஏழைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கினேன். அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்துள்ளேன். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 1998ம் ஆண்டு தொடங்கியிருந்தால் செலவு குறைவாக இருக்கும். இப்போது 1,800 கோடி செலவாகும். தமிழகத்தில் 60 சதவீதம் பேர் தான் விவசாயம் செய்கின்றனர். சிறு, குறு விவசாயிகளுக்கு மின் மோட்டார் இலவசமாகவும், பெரிய விவசாயிகளுக்கு மானியமாகவும் வழங்கப்படுமென அரசு அறிவித்துள்ளது. மின்சாரமே சரியாக கிடைப்பதில்லை. நீர்மட்டமும் 500 அடிக்கு கீழே உள்ளது.
இலவச "டிவி', காஸ் கொடுத்து ஓட்டுகளை பெற உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்; என்னை ஆதரியுங்கள்; மக்களுக்காக நல்லதை செய்வேன். கருணாநிதியால் ஒன்றும் செய்யமுடியாது. ஜெயலலிதா வழக்கிற்கு மட்டும் மேல்முறையீடு செய்ய வேண்டுமென சொல்கிறார்கள். ஆனால் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் மட்டும் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை.அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மிடாஸ் மதுபான கம்பெனியில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஏராளமான மதுபான கம்பெனிகளை தொடங்கி ஆளுங்கட்சியினர் பணம் சம்பாதிக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான். தே.மு.தி.க., தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். கோயம்புத்தூரில் டிசம்பரில் கட்சி மாநாடு நடத்தப்படும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.அறக்கட்டளை தலைவர் பிரேமலதா, அறங்காவலர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Source: தினமலர் ஆகஸ்ட் 22,2010,23:30 IST
செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் கிராமத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச திருமண மண்டபம் கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்டச் செயலர் ரமேஷ் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
திருமண மண்டபத்தை திறந்து வைத்து, ஆறு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைத்து விஜயகாந்த் பேசியதாவது:மாமண்டூர் மக்களுக்காக திருமண மண்டபம் கட்டியுள்ளேன். இதை இடிக்க தாசில்தார் வந்தார். அமைச்சரும், கலெக்டரும் மண்டபத்தை இடிக்க கூறுகின்றனர். லஞ்சம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் செயல்படுகின்றனர். மண்டபத்தை மக்களுக்கே அர்ப்பணிக்கிறேன். என் சொந்த செலவில் ஏழை மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர், ஏழைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கினேன். அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்துள்ளேன். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 1998ம் ஆண்டு தொடங்கியிருந்தால் செலவு குறைவாக இருக்கும். இப்போது 1,800 கோடி செலவாகும். தமிழகத்தில் 60 சதவீதம் பேர் தான் விவசாயம் செய்கின்றனர். சிறு, குறு விவசாயிகளுக்கு மின் மோட்டார் இலவசமாகவும், பெரிய விவசாயிகளுக்கு மானியமாகவும் வழங்கப்படுமென அரசு அறிவித்துள்ளது. மின்சாரமே சரியாக கிடைப்பதில்லை. நீர்மட்டமும் 500 அடிக்கு கீழே உள்ளது.
இலவச "டிவி', காஸ் கொடுத்து ஓட்டுகளை பெற உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள்; என்னை ஆதரியுங்கள்; மக்களுக்காக நல்லதை செய்வேன். கருணாநிதியால் ஒன்றும் செய்யமுடியாது. ஜெயலலிதா வழக்கிற்கு மட்டும் மேல்முறையீடு செய்ய வேண்டுமென சொல்கிறார்கள். ஆனால் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் மட்டும் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை.அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மிடாஸ் மதுபான கம்பெனியில் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் வாங்கப்பட்டது. இந்த ஆட்சியில் ஏராளமான மதுபான கம்பெனிகளை தொடங்கி ஆளுங்கட்சியினர் பணம் சம்பாதிக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு ஐந்து லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் கட்சிகள்தான். தே.மு.தி.க., தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். கோயம்புத்தூரில் டிசம்பரில் கட்சி மாநாடு நடத்தப்படும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.அறக்கட்டளை தலைவர் பிரேமலதா, அறங்காவலர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Source: தினமலர் ஆகஸ்ட் 22,2010,23:30 IST
Saturday, August 21, 2010
No party has come for alliance with us, sys TN BJP chief
கூட்டணிக்காக யாரும் எங்களை நாடவில்லை: பாஜக
கூட்டணிக்காக பாஜகவை நோக்கி யாரும் வரவும் இல்லை, யாரையும் நாங்கள் அணுகவும் இல்லை என்று அக் கட்சியி்ன் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. சட்டசபை [^] தேர்தலில் இளைஞர்கள், மாணவர்கள் [^], மக்கள் சக்தியை கொண்டு சொந்த பலத்தில் பாஜக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையும்.
கூட்டணிக்காக பாஜகவை நோக்கி யாரும் வரவும் இல்லை. யாரையும் நாங்கள் அணுகவும் இல்லை.
வரும் நவம்பர் முதல் அடுத்தாண்டு ஜனவரி வரை தமிழகம் [^] முழுவதும் யாத்திரை நடத்தி, பின்னர் சென்னையில் பல லட்சம் பேரை திரட்டி பொதுக்கூட்டம் நடத்தப்படும்.
இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பதில்லை. சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகிறது. இதனால் 85 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்களை திரட்டி கல்வி உதவித் தொகை கோரி போராட்டம் [^] நடத்துவோம் என்றார்.
Friday, August 20, 2010
dmdk vijayakanth committee assembly polls
தேர்தலுக்குத் தயாராகிறது-கூட்டணி உள்ளிட்டவை குறித்துப் பேச உயர்மட்டக் குழு அமைப்புதேர்தல் கூட்டணி, தொகுதி உடன்பாடு உள்ளிட்டவை குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கும் வகையில் உயர் மட்ட நிர்வாகிகள் குழுவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் உயர்மட்ட குழுவில் நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமையில், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன்-அவைத்தலைவர், எல்.கே.சுதீஷ்-மாநில இளைஞர் அணி செயலாளர், எஸ்.தங்கபாண்டியன்- துறைமுகம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், மைக்கேல் ராயப்பன்-ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர், பாலன்-மதுரை ஆகியோர் பணியாற்றுவார்கள்.
பி.கிருஷ்ணமூர்த்தி உயர்மட்ட குழுவில் நியமிக்கப்படுவதால், தேர்தல் பணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கா.ஜெகவீரபாண்டியன் தேர்தல் பணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். சி.ஆர்.பாஸ்கரன், புலவர் கதிரவன் ஆகியோர் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தக் கூட்டணியில் தேமுதிக சேரும் என்ற எதிர்பார்ப்பு ஏகமாக உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசி முடிவெடுத்து விட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. விஜயகாந்த்துடன் சேர எங்களுக்குத் தயக்கம் இல்லை என்று டாக்டர் ராமதாஸும் கூறியுள்ளார். எனவே தேமுதிகவின் கூட்டணி வியூகம் என்ன என்பது ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.
இந்த நிலையில் உயர் மட்டக் குழுவை அவர் அமைத்திருப்பது மேலும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
Source:-Thatstamil.oneindia.in சனிக்கிழமை, ஆகஸ்ட் 21, 2010, 9:14[IST]
Why I have trouble with DMK explains EVKS
தமிழகத்தில் கூட்டணி மாறும்: இளங்கோவன்
எனக்கும் திமுகவுக்கும் இடையே எதற்காக பிரச்சனை வந்தது?, ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட கோரிக்கை வந்தபோது அதை வலியுறுத்திப் பேசினேன். உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டினேன், அதனால் தான்.. என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்.
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்க கோரி தமிழக காங்கிரசின் நட்பகம் அமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாவிரதத்துக்கு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சி.டி.மெய்யப்பன் தலைமை தாங்கினார். வசந்தகுமார் எம்.எல்.ஏ. உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
இதில் பேசிய இளங்கோவன் , ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்ட உண்ணாவிரதம் இருக்கும் உங்களை வரவேற்கிறேன். இது ஒரு உருப்படியான காரியம்.
நியாயமாக சொன்னால், பொறுப்பில் உள்ளவர்கள் தான் இதை செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் 'ஜவ்வு மிட்டாய்' கொடுப்பதோடு கடமை முடிந்துவிட்டதாக கருதுகிறார்கள்.
ராஜீவ் பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்ட கேட்பது அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்க்க அல்ல. இதில் ஆளும் கட்சி அவரது பெயரை சூட்டி பெருமை தேடி கொள்ள வேண்டும்.
ராஜீவ் பெயரை சூட்டுவதில் என்ன நஷ்டம் ஏற்படப் போகிறது?. இது போன்று நான் பேசினால் என்னைப் பற்றி கோள் சொல்ல சிலர் டெல்லிக்கு செல்கிறார்கள். சிலரை திருத்தலாம், சிலரை திருத்தவே முடியாது.
எனக்கும், ஆளும் கட்சியினருக்கும் எதற்காக பிரச்சனை வந்தது?. ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட கோரிக்கை வந்தபோது அதை வலியுறுத்தி பேசினேன். உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டினேன்.
இதேபோல் மத்திய அரசு திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்படுவதை எங்கள் திட்டம் என்று கூறினேன். நான் என்றும் காங்கிரஸ்காரன். மத்திய அரசின் கொள்கை திட்டங்களை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.
தமிழகத்தில் கூட்டணி மாறும், இன்று மாலையே கூட மாறும் என்றார்.
Source:-thatstamil.oneindia.in வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2010, 15:55[IST]
எனக்கும் திமுகவுக்கும் இடையே எதற்காக பிரச்சனை வந்தது?, ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட கோரிக்கை வந்தபோது அதை வலியுறுத்திப் பேசினேன். உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டினேன், அதனால் தான்.. என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்.
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்க கோரி தமிழக காங்கிரசின் நட்பகம் அமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இந்த உண்ணாவிரதத்துக்கு இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சி.டி.மெய்யப்பன் தலைமை தாங்கினார். வசந்தகுமார் எம்.எல்.ஏ. உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
இதில் பேசிய இளங்கோவன் , ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அவரது பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்ட உண்ணாவிரதம் இருக்கும் உங்களை வரவேற்கிறேன். இது ஒரு உருப்படியான காரியம்.
நியாயமாக சொன்னால், பொறுப்பில் உள்ளவர்கள் தான் இதை செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் 'ஜவ்வு மிட்டாய்' கொடுப்பதோடு கடமை முடிந்துவிட்டதாக கருதுகிறார்கள்.
ராஜீவ் பெயரை அரசு பொது மருத்துவமனைக்கு சூட்ட கேட்பது அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்க்க அல்ல. இதில் ஆளும் கட்சி அவரது பெயரை சூட்டி பெருமை தேடி கொள்ள வேண்டும்.
ராஜீவ் பெயரை சூட்டுவதில் என்ன நஷ்டம் ஏற்படப் போகிறது?. இது போன்று நான் பேசினால் என்னைப் பற்றி கோள் சொல்ல சிலர் டெல்லிக்கு செல்கிறார்கள். சிலரை திருத்தலாம், சிலரை திருத்தவே முடியாது.
எனக்கும், ஆளும் கட்சியினருக்கும் எதற்காக பிரச்சனை வந்தது?. ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட கோரிக்கை வந்தபோது அதை வலியுறுத்தி பேசினேன். உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டினேன்.
இதேபோல் மத்திய அரசு திட்டங்கள் இங்கு செயல்படுத்தப்படுவதை எங்கள் திட்டம் என்று கூறினேன். நான் என்றும் காங்கிரஸ்காரன். மத்திய அரசின் கொள்கை திட்டங்களை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.
தமிழகத்தில் கூட்டணி மாறும், இன்று மாலையே கூட மாறும் என்றார்.
Source:-thatstamil.oneindia.in வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2010, 15:55[IST]
Thursday, August 19, 2010
ADMK front will win in TN assembly polls Vaiko
எத்தனை கோடி செலவு செய்தாலும் திமுக தோற்பது உறுதி-வைகோ
திமுக எத்தனை ஆயிரம் கோடியைச் செல்வு செய்தாலும் வெல்லப் போவது அதிமுக கூட்டணிதான் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
நாகர்கோவில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தி.மு.க., அரசு மீது எல்லா தரப்பு மக்களுக்கும் வெறுப்பு வளர்ந்து வருகிறது. விலைவாசி உயர்வு, மின்வெட்டு என மக்கள் [^] வெறுப்படைந்து போய் உள்ளனர். இதன் வெளிப்பாடாகதான் கோவை மற்றும் திருச்சி [^] அ.தி.மு.க., போராட்டத்தில் மக்கள் குவிந்தனர்.
முல்லைப்பெரியாறு பிரச்னையில் தி.மு.க.வின் நிலைப்பாடுதான் தமிழ்நாட்டுக்குரிய நியாயத்தை கிடைக்க விடாமல் செய்கிறது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அணி வலுவாக உள்ளது. இந்த அணியில் மேலும் கட்சிகள் சேருமா? என்பது போன்ற யூகங்களுக்கு ஜெயலலிதாதான் பதிலளிக்க வேண்டும். ஆனால் தி.மு.க. எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தாலும் அ.தி.மு.க., அணி வெற்றி பெறும் என்றார் வைகோ
Source:- Times of India வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 20, 2010, 10:57[IST]
ADMK allience will win the election
அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு
சென்னை : ""வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது,'' என ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார். ம.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் வைகோ பேசியதாவது: ம.தி.மு.க.,விற்கு கிடைத்துள்ள ஓட்டுக்களில், குறைந்த சதவீதத்தில் தான் தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழந்துள்ளது. இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பம்பரம் சின்னத்தில் நாம் போட்டியிட முடியும். கடந்த சட்டசபை தேர்தலில் சீமா பஷீர், மணிமாறன், நடராஜன், பூமிநாதன் போன்றவர்கள் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். அவர்கள் வெற்றி பெற்று, கூடுதலாக சில எம்.எல்.ஏ.,க்கள் நமக்கு கிடைத்திருந்தால், தேர்தல் கமிஷன் அங்கீகாரம் எளிதாக கிடைத்திருக்கும்.
மக்கள் மனதில் ம.தி.மு.க.,வின் அங்கீகாரம் நீடிக்கிறது. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சிக்கு எதிராக என் பிரசாரம் வலிமையாக இருக்கும். தி.மு.க., குடும்பச் சொத்துக்களின் முழுவிவரமும், ஆதாரத்துடன் கூடிய பல புதிய தகவல்கள் என் கைக்கு கிடைத்துள்ளது. இப்போது நான் வெளியிட்டு பேசுவதை விட, தேர்தல் நேரத்தில் ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்வேன்.
மக்கள் பிரச்னைகளில் தி.மு.க., கவனம் செலுத்தவில்லை. தினமும் ஆடம்பர பகட்டு விழாக்களை நடத்தி, மக்களை எரிச்சல் அடையச் செய்து வருகிறது. கருத்து உரிமைக்கு பலத்த அச்சுறுத்தலை தி.மு.க., அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. மக்கள் வரிப்பணத்தை பாழாக்கி, முதல்வர் குடும்ப உறுப்பினர்களுக்கு விளம்பர வெளிச்சம் தேடும் மாநாடாக கோவை செம்மொழி மாநாடு அமைந்துள்ளது.
அ.தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து விட்டது. ம.தி.மு.க.,வினருக்கும் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் சட்டசபை தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும். இவ்வாறு வைகோ பேசினார்.
Source:- தினமலர் ஆகஸ்ட் 18,2010,22:37 IST
Tuesday, August 17, 2010
Tirupur MLA Govindasamy to join dmk
திருப்பூர் எம்.எல்.ஏ. திமுகவில் சேர முடிவு!
திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி திமுகவில் இணையவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,'வரும் 25 ஆம் தேதி திமுகவில் இணையவிருக்கிறேன். 250 பேருந்துகளில் ஆதரவாளர்களுடன், சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கட்சியில் இணைவேன்' எனத் தெரிவித்தார்.
திருப்பூர் எம்.எல்.ஏ., வான கோவிந்தசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா எடுக்கும் விஷயத்தில் இவருக்கும் கட்சித் தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை கட்சியில் இருந்து நீக்கியது.
அவர் திமுகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
-சிவாஜி டிவி August 16, 2010 16:04:41
திருப்பூர் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி திமுகவில் இணையவிருப்பதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,'வரும் 25 ஆம் தேதி திமுகவில் இணையவிருக்கிறேன். 250 பேருந்துகளில் ஆதரவாளர்களுடன், சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கட்சியில் இணைவேன்' எனத் தெரிவித்தார்.
திருப்பூர் எம்.எல்.ஏ., வான கோவிந்தசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா எடுக்கும் விஷயத்தில் இவருக்கும் கட்சித் தலைமைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை கட்சியில் இருந்து நீக்கியது.
அவர் திமுகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
-சிவாஜி டிவி August 16, 2010 16:04:41
Friday, August 13, 2010
trichy tomorrow jayalalitha
திருச்சியில், நாளை ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்
விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, மணல் கொள்ளை ஆகியவற்றை கண்டித்து திருச்சி பொன்மலை “ஜி” கார்னர் மைதானத்தில் நாளை மாலை 4 மணிக்கு ஜெயலலிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வருகிறார்கள்.
வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த திருச்சியில் காஜாமியான் பள்ளி, திருச்சி இரும்பு உருக்காலை உள்பட 10 இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு உள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் தலைமை தாங்க ஜெயலலிதா தனி விமானம், நாளை மாலை 4 மணிக்கு திருச்சி விமான நிலையம் செல்கிறார். பிறகு, கார் மூலம் சுப்பிரமணியபுரம், டி.வி.எஸ்.டோல்கேட் வழியாக “ஜி”கார்னர் மைதானம் சென்று ஆர்ப்பாட்டத்தில்
பங்கேற்கின்றார்.
Source: MAALAI MALAR
சென்னை 13-08-2010 (வெள்ளிக்கிழமை)
தொண்டர்கள் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க ஆங்காங்கே 2 பேர் கொண்ட அ.தி.மு.க. வக்கீல்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது. வீடியோ மூலம் படம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Thursday, August 12, 2010
DMK rule is going to end says ADMK
‘திமுக ஆட்சி காலியாயிடுச்சி’-டெல்லியில் சொல்கிறார்கள்!
திமுக ஆட்சி காலியாயிடுச்சி’ என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுவதாக அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செஙகோட்டையன் கூறினார்.
திருச்சியில் வரும் 14ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கண்டனக் கூட்டம் நடக்கவுள்ளது.
கூட்டம் நடைபெறவுள்ள ரயில்வே மைதானத்தில் இன்று அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.
பன்னீர்செல்வம் கூறுகையில், அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என்பதற்கு இந்த திருச்சி கண்டனக் கூட்டம் அச்சாரமாக அமையும். ஆட்சி முடியப்போகிற நேரத்தில் திமுகவின் அராஜகம் தலை தூக்குகிறது.
அதிமுகவின் எந்தவொரு பேனரிலும் ஆளுங்கட்சியை எதிர்த்து வாசகங்கள் இடம் பெறக்கூடாது என்று போலீசார் மிரட்டுகிறார்கள். அராஜகம் எப்படியெல்லாம் தலை தூக்கியிருக்கிறது பாருங்கள்.
திருச்சியில் 7 இடங்களில் பேனர் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட மாநாட்டில் 10 லட்சம் அதிமுகவினர் கூடுகிறார்கள். ஜெ. பேரவை மற்றும் அதிமுக இளைஞரணியை சேர்ந்த 1,200 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மாநாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
செங்கோட்டையன் கூறுகையில், திமுகவின் குடும்ப அரசியலை எதிர்த்து மக்கள் பிரச்சனைக்காக திருச்சியில் இந்த கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது.
கோவைமாநாட்டில் கழக பொதுச்செயலாளர் 1 மணி நேரம் பேசினார். அந்த ஒரு மணி நேர பேச்சுக்கு முதல்வர் கருணாநிதி 10 நாட்கள் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ரயில்வே மைதானத்தில் மாநாடு நடத்துவதற்காக அனுமதி பெற டெல்லி சென்றிருந்தோம். அப்போது டெல்லி வட்டாரத்தில், ‘திமுக ஆட்சி காலியாயிடுச்சி’ என்று சொன்னார்கள்.
மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த 5 மைதானங்களை தயார் செய்திருக்கிறோம் என்றார்.
Source:-Thatstamil.oneindia.in வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 12:28[IST]
திமுக ஆட்சி காலியாயிடுச்சி’ என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுவதாக அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செஙகோட்டையன் கூறினார்.
திருச்சியில் வரும் 14ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கண்டனக் கூட்டம் நடக்கவுள்ளது.
கூட்டம் நடைபெறவுள்ள ரயில்வே மைதானத்தில் இன்று அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர்.
பன்னீர்செல்வம் கூறுகையில், அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என்பதற்கு இந்த திருச்சி கண்டனக் கூட்டம் அச்சாரமாக அமையும். ஆட்சி முடியப்போகிற நேரத்தில் திமுகவின் அராஜகம் தலை தூக்குகிறது.
அதிமுகவின் எந்தவொரு பேனரிலும் ஆளுங்கட்சியை எதிர்த்து வாசகங்கள் இடம் பெறக்கூடாது என்று போலீசார் மிரட்டுகிறார்கள். அராஜகம் எப்படியெல்லாம் தலை தூக்கியிருக்கிறது பாருங்கள்.
திருச்சியில் 7 இடங்களில் பேனர் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட மாநாட்டில் 10 லட்சம் அதிமுகவினர் கூடுகிறார்கள். ஜெ. பேரவை மற்றும் அதிமுக இளைஞரணியை சேர்ந்த 1,200 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மாநாட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
செங்கோட்டையன் கூறுகையில், திமுகவின் குடும்ப அரசியலை எதிர்த்து மக்கள் பிரச்சனைக்காக திருச்சியில் இந்த கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது.
கோவைமாநாட்டில் கழக பொதுச்செயலாளர் 1 மணி நேரம் பேசினார். அந்த ஒரு மணி நேர பேச்சுக்கு முதல்வர் கருணாநிதி 10 நாட்கள் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ரயில்வே மைதானத்தில் மாநாடு நடத்துவதற்காக அனுமதி பெற டெல்லி சென்றிருந்தோம். அப்போது டெல்லி வட்டாரத்தில், ‘திமுக ஆட்சி காலியாயிடுச்சி’ என்று சொன்னார்கள்.
மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த 5 மைதானங்களை தயார் செய்திருக்கிறோம் என்றார்.
Source:-Thatstamil.oneindia.in வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 12:28[IST]
BJP to form alliance with caste parties in TN
தமிழகத்தில் கூட்டணி 'குருமா'-பாஜக முயற்சி!
தமிழகத்தில் தன்னை கூட்டணியில் சேர்க்க அதிமுக மறுத்து வருவதால் ஜாதிக் கட்சிகளை இழுத்து புதிதாக ஒரு மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
சில சட்டமன்றத் தேர்தல்களில் திமுக, அதிமுக கூட்டணியில் இணைந்து சில தொகுதிகளில் வென்ற பாஜக பின்னர் இரு கட்சிகளாலும் கழற்றிவிடப்பட்டது. இதையடுத்து அதன் உண்மையான 'செல்வாக்கு' வெளியில் தெரிந்தது.
இந் நிலையில் சட்டமன்றத் தேர்தல் வருவதால் குறைந்தது 50 இடங்களிலாவது போட்டியிட்டு டெபாசிட்டைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் தெடார்ந்த வண்ணம் இருக்கும் நிலையில், மறுபுறம் அதிமுக தனது தலைமையில் புதிய கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந் நிலையில், தேசியக் கட்சியான பாஜக மட்டும் தனித்து விட்டப்பட்டது. விஜய்காந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேர தீவிரமாக முயன்ற அந்தக் கட்சிக்கு தோல்வியே கிடைத்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஜாதிக் கட்சி மற்றும் சிறிய கட்சிகளை எல்லாம் ஒரு அணியாக இணைத்து தேர்தலை சந்தித்த பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது.
பாஜகவின் இந்த தேர்தல் தூண்டிலில் முதலில் மாட்டியுள்ளது அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகம் என்று கூறப்படுகிறது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் விசு. சிவக்குமார் பாஜக தலைவர்களிடம் சமீப காலமாக நெருக்கம் காட்டி வருகிறார்.
அதே போல பிற ஜாதிக் கட்சிகளுக்கும் பாஜக வலை வீசி வருகிறது.
தமிழக விரைவில் நடைபெற உள்ள பாஜக தலைவர் ஒருவரின் இல்ல விழாவில் தமிழகத்தில் உள்ள முக்கிய ஜாதி கட்சி தலைவர்களை காணலாம் என்கின்றார்கள்.
Source:- Thatstamil.oneindia.in வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 11:41[IST]
தமிழகத்தில் தன்னை கூட்டணியில் சேர்க்க அதிமுக மறுத்து வருவதால் ஜாதிக் கட்சிகளை இழுத்து புதிதாக ஒரு மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
சில சட்டமன்றத் தேர்தல்களில் திமுக, அதிமுக கூட்டணியில் இணைந்து சில தொகுதிகளில் வென்ற பாஜக பின்னர் இரு கட்சிகளாலும் கழற்றிவிடப்பட்டது. இதையடுத்து அதன் உண்மையான 'செல்வாக்கு' வெளியில் தெரிந்தது.
இந் நிலையில் சட்டமன்றத் தேர்தல் வருவதால் குறைந்தது 50 இடங்களிலாவது போட்டியிட்டு டெபாசிட்டைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்புகள் தெடார்ந்த வண்ணம் இருக்கும் நிலையில், மறுபுறம் அதிமுக தனது தலைமையில் புதிய கட்சிகளை கூட்டணிக்குள் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந் நிலையில், தேசியக் கட்சியான பாஜக மட்டும் தனித்து விட்டப்பட்டது. விஜய்காந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேர தீவிரமாக முயன்ற அந்தக் கட்சிக்கு தோல்வியே கிடைத்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள ஜாதிக் கட்சி மற்றும் சிறிய கட்சிகளை எல்லாம் ஒரு அணியாக இணைத்து தேர்தலை சந்தித்த பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது.
பாஜகவின் இந்த தேர்தல் தூண்டிலில் முதலில் மாட்டியுள்ளது அகில இந்திய கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகம் என்று கூறப்படுகிறது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் விசு. சிவக்குமார் பாஜக தலைவர்களிடம் சமீப காலமாக நெருக்கம் காட்டி வருகிறார்.
அதே போல பிற ஜாதிக் கட்சிகளுக்கும் பாஜக வலை வீசி வருகிறது.
தமிழக விரைவில் நடைபெற உள்ள பாஜக தலைவர் ஒருவரின் இல்ல விழாவில் தமிழகத்தில் உள்ள முக்கிய ஜாதி கட்சி தலைவர்களை காணலாம் என்கின்றார்கள்.
Source:- Thatstamil.oneindia.in வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 11:41[IST]
Actress Roja to join ADMK
அதிமுகவில் இணைகிறார் நடிகை ரோஜா
நடிகை ரோஜா அதிமுகவில் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்தவரான ரோஜா தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணியை மணந்தார்.
சினிமா வாய்ப்புகள் எல்லாம் தேய்ந்து போன பின்னர் ஆந்திர அரசியலில் நுழைந்தார். முதலில் தெலுங்கு தேசத்தில் இணைந்தார். அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, காங்கிரசுக்குத் தாவினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இவரை காங்கிரசில் சேர்த்துக் கொண்டார். ஆனால், அவரது மறைவுக்குப் பின் காங்கிரசில் ரோஜாவை கண்டுகொள்ளவே ஆளில்லை.
இதனால் வேறு கட்சி தேடிக் கொண்டிருந்தவருக்கு தமிழக சட்டமன்றத் தேர்தல் நினைவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. அதே போல குஷ்பு போன்ற கலர்புல் நபர்களை திமுக இழுத்துப் போட்டுள்ளதால் அதிமுகவும் தனது கட்சிக்கு பிரச்சாரம் செய்ய நடிகை, நடிகர்களுக்கு வலைவீசி வருகிறது.
கடந்த தேர்தலில் சிம்ரன், விந்தியா போன்றவர்கள் எல்லாம் அதிமுகவுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ததது நினைவுகூறத்தக்கது.
இப்போது அதிமுக வீசிய வலையில் ரோஜா சி்க்கியுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் ரோஜா அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து கட்சியில் இணைவார் என்கிறார்கள்.
ஆனால் சிம்ரன், விந்தியா போல அல்லாமல் ரோஜா தானும் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. குஷ்பு போன்றவர்களை திமுக நிறுத்தினால் எதிர்த்து ரோஜாவை அதிமுக நிறுத்தலாம் என்கிறார்கள்.
Source:- Thatstamil.oneindia.in வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 10:34[IST]
நடிகை ரோஜா அதிமுகவில் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஹைதராபாத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்தவரான ரோஜா தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணியை மணந்தார்.
சினிமா வாய்ப்புகள் எல்லாம் தேய்ந்து போன பின்னர் ஆந்திர அரசியலில் நுழைந்தார். முதலில் தெலுங்கு தேசத்தில் இணைந்தார். அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, காங்கிரசுக்குத் தாவினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இவரை காங்கிரசில் சேர்த்துக் கொண்டார். ஆனால், அவரது மறைவுக்குப் பின் காங்கிரசில் ரோஜாவை கண்டுகொள்ளவே ஆளில்லை.
இதனால் வேறு கட்சி தேடிக் கொண்டிருந்தவருக்கு தமிழக சட்டமன்றத் தேர்தல் நினைவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது. அதே போல குஷ்பு போன்ற கலர்புல் நபர்களை திமுக இழுத்துப் போட்டுள்ளதால் அதிமுகவும் தனது கட்சிக்கு பிரச்சாரம் செய்ய நடிகை, நடிகர்களுக்கு வலைவீசி வருகிறது.
கடந்த தேர்தலில் சிம்ரன், விந்தியா போன்றவர்கள் எல்லாம் அதிமுகவுக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ததது நினைவுகூறத்தக்கது.
இப்போது அதிமுக வீசிய வலையில் ரோஜா சி்க்கியுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் ரோஜா அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்து கட்சியில் இணைவார் என்கிறார்கள்.
ஆனால் சிம்ரன், விந்தியா போல அல்லாமல் ரோஜா தானும் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகக் கூறப்படுகிறது. குஷ்பு போன்றவர்களை திமுக நிறுத்தினால் எதிர்த்து ரோஜாவை அதிமுக நிறுத்தலாம் என்கிறார்கள்.
Source:- Thatstamil.oneindia.in வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 10:34[IST]
Wednesday, August 11, 2010
Subramanya Swamy meets media
என் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை : ஐயோ பாவம் சுப்பிரமணியசாமி!
August 11, 2010 15:48:51
என்னுடைய ஜனதா கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லை!' என அதன் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
'நக்சல்தீவிரவாதிகள் மீது இந்திய அரசு இரக்கம் காட்டக்கூடாது. இப்பிரச்னைகளுக்கு அரசு விரைவாகத் தீர்வு காண வேண்டும்.
காஷ்மீருக்கு மாநில சுயாட்சி வழங்கப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.சுயாட்சி வழங்கினால் அங்கே தீவிரவாதிகள் தெம்படைவர். தீவிரவாதம் இன்னும் வளரும். எனவே மாநில சுயாட்சி வழங்கக்கூடாது.
தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்தும், இந்துத்துவத்தை வலியுறுத்தியும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது மக்கள் கையில் உள்ளது. தற்போது நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. ஜனவரி 14 ஆம் தேதிக்குப் பிறகு எங்கள் கட்சியின் நிலைப் பற்றி அறிவிப்போம்' என்று கூறியுள்ளனர்.
-சிவாஜி டிவி
August 11, 2010 15:48:51
என்னுடைய ஜனதா கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லை!' என அதன் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
'நக்சல்தீவிரவாதிகள் மீது இந்திய அரசு இரக்கம் காட்டக்கூடாது. இப்பிரச்னைகளுக்கு அரசு விரைவாகத் தீர்வு காண வேண்டும்.
காஷ்மீருக்கு மாநில சுயாட்சி வழங்கப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.சுயாட்சி வழங்கினால் அங்கே தீவிரவாதிகள் தெம்படைவர். தீவிரவாதம் இன்னும் வளரும். எனவே மாநில சுயாட்சி வழங்கக்கூடாது.
தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்தும், இந்துத்துவத்தை வலியுறுத்தியும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது மக்கள் கையில் உள்ளது. தற்போது நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. ஜனவரி 14 ஆம் தேதிக்குப் பிறகு எங்கள் கட்சியின் நிலைப் பற்றி அறிவிப்போம்' என்று கூறியுள்ளனர்.
-சிவாஜி டிவி
Dont form alliance with Congress BJP to ADMK
காங்கிரசுடன் கூட்டு வேண்டாம்-அதிமுக பாஜக 'அட்வைஸ்'!
சென்னை: காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முன்னாள் அமைச்சர் இளங்கோவன் திமுகவை கண்டபடி விமர்சிக்கிறார். இளங்கோவன் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து, முதல்வர் கருணாநிதி மனம் திறந்து அறிக்கை விட்ட பிறகும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் முதல்வரை இதுவரை சந்தித்துப் பேசவில்லை.
ராகுல் காந்தி நான்கு முறை தமிழகம் வந்தார். ஒரு முறை கூட கருணாநிதியை சந்திக்கவில்லை. இதிலிருந்தே திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்காது என்பது தெளிவாகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு நிச்சயம் பாதிக்கப்படும்.
அதே போல காங்கிரஸ் கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தால், தமிழ் சமுதாயத்திற்கு அவர் துரோகம் செய்தது போலாகி விடும் என்றார் ராஜா
Source:thatstamil.oneindia.in புதன்கிழமை, ஆகஸ்ட் 11, 2010, 13:11[IST]
சென்னை: காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முன்னாள் அமைச்சர் இளங்கோவன் திமுகவை கண்டபடி விமர்சிக்கிறார். இளங்கோவன் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து, முதல்வர் கருணாநிதி மனம் திறந்து அறிக்கை விட்ட பிறகும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் யாரும் முதல்வரை இதுவரை சந்தித்துப் பேசவில்லை.
ராகுல் காந்தி நான்கு முறை தமிழகம் வந்தார். ஒரு முறை கூட கருணாநிதியை சந்திக்கவில்லை. இதிலிருந்தே திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்காது என்பது தெளிவாகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு நிச்சயம் பாதிக்கப்படும்.
அதே போல காங்கிரஸ் கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தால், தமிழ் சமுதாயத்திற்கு அவர் துரோகம் செய்தது போலாகி விடும் என்றார் ராஜா
Source:thatstamil.oneindia.in புதன்கிழமை, ஆகஸ்ட் 11, 2010, 13:11[IST]
Monday, August 9, 2010
PMK to lead Social justice front Ramadoss
பாமக தனித்துப் போட்டியிட்டால் 20 இடங்களை வெல்லும்-ராமதாஸ்
நாங்கள் தனித்துப் போட்டியிட்டால் கூட 20 இடங்களை சுலபமாக கைப்பற்ற முடியும். எங்களது தலைமையில் தமிழகத்தில் சமூக நீதிக் கூட்டணி நிச்சயம் அமையும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
கூட்டணி விஷயத்தில் வழக்கம்போல் மாறி மாறி பேசி வருகிறது பாமக. டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும், எங்களது பலம் இப்படி, அப்படி என்று ஊர் ஊராகப் போய்ப் பேசி வருகிறார்கள்.
அன்புமணி தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பேசி வருகிறார். டாக்டர் ராமதாஸ் தென் மாவட்டங்களை வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நெல்லையில் பேசியபோது, திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அழைத்தால் போய்ப் பேசுவோம் என்றார். மதுரையில் அவர் பேசியபோது காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி மலரும் என்றார். ஆனால் நேற்று தேனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி வரும் என்றார்.
தேனியில் அவர் கூறுகையில், பாமக தலைமையில் 1991 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் சமூக நீதிக் கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளது.
பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களைக் கைப்பற்றும். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்யூனிஸ்ட் தனியாக கூட்டணி அமைத்ததும் இல்லை.
திமுக அரசுக்கு மதிப்பீடு கொடுக்க நான் தயாராக இல்லை. தேர்தலில் மக்கள்தான் மதிóப்பீடு வழங்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பாமகமுழு ஆதரவு அளிக்கிறது.
ஏழைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை முதல்வர் அறிவிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள், பிரதமர் ஆகியோர் பேசித் தீர்க்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார் ராமதாஸ்.
தேர்தலுக்கு ஆயத்தம்-இன்று நிர்வாகக் குழு கூட்டம்:
இந் நிலையில் பாமக தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.
இதில் தற்போதைய அரசியல் நிலவரம், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல், கூட்டணி ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
இதற்கிடையில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது போலீஸார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வன்னியருக்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தில், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசினார் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குரு மீது நடவடிக்கை-பாமவுக்கு திமுக மிரட்டலா?:
கடந்த முறை மத்திய அமைச்சர் ஆ. ராசா பற்றி காடுவெட்டி குரு பேசியதன் தொடர்ச்சியாகத்தான் திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து குரு கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டார். அவ்வாறு சிறை வைக்கப்பட்டதில் தவறில்லை என்று நீதிமன்றம் கூறியது.
இந் நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக சேரக்கூடும் என்ற கருத்து பரவியது. அப்போது காடுவெட்டி குரு மீதான கைது நடவடிக்கை கைவிடப்பட்டது.
இப்போது மறுபடியும் காடுவெட்டி குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, பாமகவுக்கு திமுக மிரட்டல் விடுக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தச் சூழலில் எந்த வகையான அணுகுமுறையைக் கையாள்வது என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது
Source:- Thatstamil.oneindia.in செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 10, 2010, 9:06[IST]
நாங்கள் தனித்துப் போட்டியிட்டால் கூட 20 இடங்களை சுலபமாக கைப்பற்ற முடியும். எங்களது தலைமையில் தமிழகத்தில் சமூக நீதிக் கூட்டணி நிச்சயம் அமையும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
கூட்டணி விஷயத்தில் வழக்கம்போல் மாறி மாறி பேசி வருகிறது பாமக. டாக்டர் ராமதாஸும், அவரது மகன் அன்புமணி ராமதாஸும், எங்களது பலம் இப்படி, அப்படி என்று ஊர் ஊராகப் போய்ப் பேசி வருகிறார்கள்.
அன்புமணி தமிழகத்தின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பேசி வருகிறார். டாக்டர் ராமதாஸ் தென் மாவட்டங்களை வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நெல்லையில் பேசியபோது, திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேச ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அழைத்தால் போய்ப் பேசுவோம் என்றார். மதுரையில் அவர் பேசியபோது காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி மலரும் என்றார். ஆனால் நேற்று தேனியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி வரும் என்றார்.
தேனியில் அவர் கூறுகையில், பாமக தலைமையில் 1991 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் சமூக நீதிக் கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலிலும் பாமக தலைமையில் சமூக நீதிக் கூட்டணி அமையும் வாய்ப்பு உள்ளது.
பாமக தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களைக் கைப்பற்றும். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் கூட்டணி என்ற பேச்சுக்கு இடமில்லை. கம்யூனிஸ்ட் தனியாக கூட்டணி அமைத்ததும் இல்லை.
திமுக அரசுக்கு மதிப்பீடு கொடுக்க நான் தயாராக இல்லை. தேர்தலில் மக்கள்தான் மதிóப்பீடு வழங்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு பாமகமுழு ஆதரவு அளிக்கிறது.
ஏழைகளின் நலன் கருதி பூரண மதுவிலக்கை முதல்வர் அறிவிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். நதிநீர்ப் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்கள், பிரதமர் ஆகியோர் பேசித் தீர்க்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் நீதிமன்றம் மற்றும் அரசு உத்தரவின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றார் ராமதாஸ்.
தேர்தலுக்கு ஆயத்தம்-இன்று நிர்வாகக் குழு கூட்டம்:
இந் நிலையில் பாமக தலைமை நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.
இதில் தற்போதைய அரசியல் நிலவரம், அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல், கூட்டணி ஆகியவை குறித்து விவாதிக்கப்படவுள்ளன.
இதற்கிடையில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது போலீஸார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வன்னியருக்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு கேட்கும் போராட்டத்தில், அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசினார் என்ற புகாரின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குரு மீது நடவடிக்கை-பாமவுக்கு திமுக மிரட்டலா?:
கடந்த முறை மத்திய அமைச்சர் ஆ. ராசா பற்றி காடுவெட்டி குரு பேசியதன் தொடர்ச்சியாகத்தான் திமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற நேரிட்டது. அதைத் தொடர்ந்து குரு கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் சிறை வைக்கப்பட்டார். அவ்வாறு சிறை வைக்கப்பட்டதில் தவறில்லை என்று நீதிமன்றம் கூறியது.
இந் நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக சேரக்கூடும் என்ற கருத்து பரவியது. அப்போது காடுவெட்டி குரு மீதான கைது நடவடிக்கை கைவிடப்பட்டது.
இப்போது மறுபடியும் காடுவெட்டி குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, பாமகவுக்கு திமுக மிரட்டல் விடுக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்தச் சூழலில் எந்த வகையான அணுகுமுறையைக் கையாள்வது என்பது பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது
Source:- Thatstamil.oneindia.in செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 10, 2010, 9:06[IST]
Saturday, August 7, 2010
No one can rule Tamilnadu withot support of PMK says Anbumani Ramadoss
பாமக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது!: அன்புமணி
August 07, 2010 14:10:43
பாமக வின் துணை இல்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று பாமக இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சேலத்தில் இன்று நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,
'பாமக வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. கடந்த 10 வருடத்தில், எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்கவில்லை. எங்கள் கட்சிக்கு பலமில்லை என்கிறார்கள். எல்லாக் கட்சிகளையும் தனித் தனியாகப் போட்டியிடச் சொல்லுங்கள், நாங்களும் தனியாக நிற்கிறோம். யாருக்கு பலம் அதிகம் என்பது அப்போது தெரியும் என்றவர்
சாதிவாரி கணக்கெடுக்க 400 கோடி ரூபாய் செலவாகும் என்கிறார்கள். அதே வேலையை கிராம நிர்வாக அதிகாரிகளைக் கொண்டு செய்தால் 40 கோடி ரூபாய் தான் செலவாகும்.
தமிழக அரசின் ஆய்வுப்படி, தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்கள் பின்தங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் 7 மாவட்டங்கள் வடமாவட்டங்கள். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 73 சதவிகித மக்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். இதிலும் வன்னியர்கள் 46 சதவிகிகதம் பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 36 சதவிகிதம் பேர் குடிசைகளில் வாழ்கின்றனர். இதில் இருந்து வன்னியர்கள் பின்தங்கி இருப்பது தெரியும். அதனால்தான் 20 சதவிகித ஒதுக்கீடு கேட்டு, சமூக நீதி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.வன்னிய சமுதாயத்தினரை முன்னேற்றாமல் தமிழ்நாடு முன்னேறாது.
ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டுமானால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும். சிறப்பு நிபுணர் குழு இலங்கைக்குச் செல்வதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை.
காவிரியை வைகையோடு இணைப்பதாக் கூறிவரும் தமிழக அரசு அனைத்து நலன்களையும் தென் பகுதிகளுக்கே செய்கிறது. காவிரியை ஏன் பாலாற்றோடு இணைக்கக் கூடாது?' என்றவர்,
சேலத்தில் புதிய அரசு மருத்துவமனை வருவதற்கு நான்தான் காரணம். ஆனால் அதன் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் கூட தரவில்லை' என்று வருத்தப்பட்டார்.
-சிவாஜி டிவி
August 07, 2010 14:10:43
பாமக வின் துணை இல்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று பாமக இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் கூறினார்.
சேலத்தில் இன்று நிருபர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,
'பாமக வை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. கடந்த 10 வருடத்தில், எங்கள் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்கவில்லை. எங்கள் கட்சிக்கு பலமில்லை என்கிறார்கள். எல்லாக் கட்சிகளையும் தனித் தனியாகப் போட்டியிடச் சொல்லுங்கள், நாங்களும் தனியாக நிற்கிறோம். யாருக்கு பலம் அதிகம் என்பது அப்போது தெரியும் என்றவர்
சாதிவாரி கணக்கெடுக்க 400 கோடி ரூபாய் செலவாகும் என்கிறார்கள். அதே வேலையை கிராம நிர்வாக அதிகாரிகளைக் கொண்டு செய்தால் 40 கோடி ரூபாய் தான் செலவாகும்.
தமிழக அரசின் ஆய்வுப்படி, தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்கள் பின்தங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் 7 மாவட்டங்கள் வடமாவட்டங்கள். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் 73 சதவிகித மக்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். இதிலும் வன்னியர்கள் 46 சதவிகிகதம் பேரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 36 சதவிகிதம் பேர் குடிசைகளில் வாழ்கின்றனர். இதில் இருந்து வன்னியர்கள் பின்தங்கி இருப்பது தெரியும். அதனால்தான் 20 சதவிகித ஒதுக்கீடு கேட்டு, சமூக நீதி போராட்டத்தை நடத்தி வருகிறோம்.வன்னிய சமுதாயத்தினரை முன்னேற்றாமல் தமிழ்நாடு முன்னேறாது.
ஈழத் தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டுமானால், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும். சிறப்பு நிபுணர் குழு இலங்கைக்குச் செல்வதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை.
காவிரியை வைகையோடு இணைப்பதாக் கூறிவரும் தமிழக அரசு அனைத்து நலன்களையும் தென் பகுதிகளுக்கே செய்கிறது. காவிரியை ஏன் பாலாற்றோடு இணைக்கக் கூடாது?' என்றவர்,
சேலத்தில் புதிய அரசு மருத்துவமனை வருவதற்கு நான்தான் காரணம். ஆனால் அதன் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் கூட தரவில்லை' என்று வருத்தப்பட்டார்.
-சிவாஜி டிவி
CM has not answered my many questions EVKS Elangovan
என்னுடைய பிற கேள்விகளுக்கு முதல்வர் விளக்கமளிக்கவில்லையே-இளங்கோவன்
கலைஞர் வீட்டு வசதித் திட்டம் குறித்த எனது குற்றச்சாட்டுக்கு மட்டுமே முதல்வர் பதிலளித்துள்ளார். எனது பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன் .
இதுகுறித்து அவர் கூறுகையில், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் குறித்த எனது குற்றச்சாட்டுக்கு மட்டுமே முதல்வர் பதிலளித்துள்ளார். அதேசமயம், மத்திய அரசின் பல திட்டங்களை மாநிலஅரசு மக்களிடையே நல்ல முறையில் விளம்பரம் செய்யவில்லை என்பது உள்பட பல கேள்விகளுக்கு அவர் விளக்கம் தரவில்லை.
என்னை பொறுத்தவரை, முதல்வரின் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமில்லை. முதல்வரின் வயது, அனுபவம் ஆகியவற்றை நான் மதிக்கிறேன். எனது கேள்வியெல்லாம், மத்திய அரசில் பங்கு பெற்றிருக்கும் திமுக, மத்திய அரசின் எந்தத் திட்டங்களையும் மாநில அளவில் பெரிதாக விளம்பரப்படுத்தவில்லையே, ஏன் என்பதுதான்.
1 ரூபாய் அரிசித் திட்டத்திற்கு மத்திய அரசு உதவுகிறது என்று நான் கூறிய பிறகுதான், ஆமாம், மத்திய அரசு உதவுகிறது என்பதை பகிரங்கமாக தெரியப்படுத்தி ஒப்புக் கொண்டது திமுக அரசு. அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 80 சதவீதத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்தான் அளிக்கின்றன.
அரசின் சில குறைகளையும், தவறுகளையும்தான் நான் சுட்டிக் காட்டினேன்.
அதேபோல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ. 100 சம்பளமாக மத்திய அரசு தருகிறது. ஆனால் அந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வேலைக்கு வருவோருக்கு ரூ. 70 முதல் 80 மட்டுமே தருகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை முதல்வர் பதிலளிக்கவில்லை.
இப்படி பல பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசுவதற்காகத்தான் 2 முறை சந்திக்க அவகாசம் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை.
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்றால், காங்கிரஸாரும், மக்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
கூட்டணியை பலப்படுத்துவது தான் என்னுடைய நோக்கமே தவிர, கூட்டணியை பலவீனப்படுத்துவது அல்ல. இதனால் தான், கூட்டணியில் உள்ள சிறு, சிறு தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன். குறைகளை சுட்டிக் காட்டுவதால் கூட்டணி உடையாது. மத்திய அரசின் திட்டங்களை முறையாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் திமுக அரசு, இதைத்தான் நான் சொல்கிறேன் என்றார் இளங்கோவன்.
Source:- Thatstamil.oneindia.in சனிக்கிழமை, ஆகஸ்ட் 7, 2010, 11:46[IST]
கலைஞர் வீட்டு வசதித் திட்டம் குறித்த எனது குற்றச்சாட்டுக்கு மட்டுமே முதல்வர் பதிலளித்துள்ளார். எனது பல கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன் .
இதுகுறித்து அவர் கூறுகையில், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் குறித்த எனது குற்றச்சாட்டுக்கு மட்டுமே முதல்வர் பதிலளித்துள்ளார். அதேசமயம், மத்திய அரசின் பல திட்டங்களை மாநிலஅரசு மக்களிடையே நல்ல முறையில் விளம்பரம் செய்யவில்லை என்பது உள்பட பல கேள்விகளுக்கு அவர் விளக்கம் தரவில்லை.
என்னை பொறுத்தவரை, முதல்வரின் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமில்லை. முதல்வரின் வயது, அனுபவம் ஆகியவற்றை நான் மதிக்கிறேன். எனது கேள்வியெல்லாம், மத்திய அரசில் பங்கு பெற்றிருக்கும் திமுக, மத்திய அரசின் எந்தத் திட்டங்களையும் மாநில அளவில் பெரிதாக விளம்பரப்படுத்தவில்லையே, ஏன் என்பதுதான்.
1 ரூபாய் அரிசித் திட்டத்திற்கு மத்திய அரசு உதவுகிறது என்று நான் கூறிய பிறகுதான், ஆமாம், மத்திய அரசு உதவுகிறது என்பதை பகிரங்கமாக தெரியப்படுத்தி ஒப்புக் கொண்டது திமுக அரசு. அதேபோல மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 80 சதவீதத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்தான் அளிக்கின்றன.
அரசின் சில குறைகளையும், தவறுகளையும்தான் நான் சுட்டிக் காட்டினேன்.
அதேபோல தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு ரூ. 100 சம்பளமாக மத்திய அரசு தருகிறது. ஆனால் அந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வேலைக்கு வருவோருக்கு ரூ. 70 முதல் 80 மட்டுமே தருகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை முதல்வர் பதிலளிக்கவில்லை.
இப்படி பல பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசுவதற்காகத்தான் 2 முறை சந்திக்க அவகாசம் கேட்டேன். ஆனால் கிடைக்கவில்லை.
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்றால், காங்கிரஸாரும், மக்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.
கூட்டணியை பலப்படுத்துவது தான் என்னுடைய நோக்கமே தவிர, கூட்டணியை பலவீனப்படுத்துவது அல்ல. இதனால் தான், கூட்டணியில் உள்ள சிறு, சிறு தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன். குறைகளை சுட்டிக் காட்டுவதால் கூட்டணி உடையாது. மத்திய அரசின் திட்டங்களை முறையாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் திமுக அரசு, இதைத்தான் நான் சொல்கிறேன் என்றார் இளங்கோவன்.
Source:- Thatstamil.oneindia.in சனிக்கிழமை, ஆகஸ்ட் 7, 2010, 11:46[IST]
Friday, August 6, 2010
KV Thangabalu Warns EVKS Elankovan
கூட்டணி தொடர்பாக வாய் திறக்கக் கூடாது!: இளங்கோவனுக்கு தங்கபாலு எச்சரிக்கை
கலைஞர் வீட்டு வசதித் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி அளித்திருந்த பதில் போதாது என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் பதில் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில் 'கூட்டணி குறித்து யாரும் கருத்து கூறக்கூடாது.தலைவி சோனியா எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக யாரும் நடக்க முடியாது' என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:
தி.மு.க. பற்றி இளங்கோவன் விமர்சனம் செய்திருக்கிறாரே?
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. வலிமையானது. யாராலும் பல வீனப்படுத்த முடியாது. இந்த கூட்டணியின் வலிமைக்கு கவசமாகவும், வலிக்கு நிவாரணமாகவும் இருப்போம்.
கூட்டணி தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது. கட்சியின்பலம், பலவீனங்கள் குறித்து வெளிமேடைகளில் பேசக்கூடாது என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன். எல்லோரும் அவரவர்களுக்குரிய எல்லை தாண்டி பேசக்கூடாது. சோனியா எடுக்கும் முடிவுகளுக்கு மாறாகயாரும் நடக்க முடியாது.
இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொறுத்திருந்து பாருங்கள்.
அ.தி.மு.க.வுக்கு வலிமை சேர்ந்து வருவது போல் கூறப்படுகிறது. சிறுபான்மையினரும் சந்தித்து பேசி உள்ளார்களே. இது உங்களுக்கு பலவீனமாக அமையுமா?
மத்திய அரசு மூலமும், மாநில அரசு மூலமும் சிறுபான்மையினர் நிறைய சலுகைகள் பெற்றுள்ளார்கள். இதை அவர்களே அறிவார்கள். எனவே மாயையை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை
-சிவாஜி டிவி
கலைஞர் வீட்டு வசதித் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி., ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எழுப்பிய கேள்விக்கு தமிழக முதல்வர் கருணாநிதி அளித்திருந்த பதில் போதாது என்று, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் பதில் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில் 'கூட்டணி குறித்து யாரும் கருத்து கூறக்கூடாது.தலைவி சோனியா எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக யாரும் நடக்க முடியாது' என்று அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:
தி.மு.க. பற்றி இளங்கோவன் விமர்சனம் செய்திருக்கிறாரே?
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது. வலிமையானது. யாராலும் பல வீனப்படுத்த முடியாது. இந்த கூட்டணியின் வலிமைக்கு கவசமாகவும், வலிக்கு நிவாரணமாகவும் இருப்போம்.
கூட்டணி தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது. கட்சியின்பலம், பலவீனங்கள் குறித்து வெளிமேடைகளில் பேசக்கூடாது என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன். எல்லோரும் அவரவர்களுக்குரிய எல்லை தாண்டி பேசக்கூடாது. சோனியா எடுக்கும் முடிவுகளுக்கு மாறாகயாரும் நடக்க முடியாது.
இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பொறுத்திருந்து பாருங்கள்.
அ.தி.மு.க.வுக்கு வலிமை சேர்ந்து வருவது போல் கூறப்படுகிறது. சிறுபான்மையினரும் சந்தித்து பேசி உள்ளார்களே. இது உங்களுக்கு பலவீனமாக அமையுமா?
மத்திய அரசு மூலமும், மாநில அரசு மூலமும் சிறுபான்மையினர் நிறைய சலுகைகள் பெற்றுள்ளார்கள். இதை அவர்களே அறிவார்கள். எனவே மாயையை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை
-சிவாஜி டிவி
Thursday, August 5, 2010
tamilnadu politics admk mnmk
அதிமுக கூட்டணியில் இணைகிறது மனித நேய மக்கள் கட்
மனித நேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணையவுள்ளது. நேற்று இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சட்டசபைத் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது. முதல் கட்டமாக கூட்டணியை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இறங்கியுள்ளார்.
இதையடுத்து சமீபத்தில் புதிய தமிழகம் [^] கட்சி அதிமுககூட்டணிக்கு வந்து சேர்ந்தது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார். அப்போது எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாஹ் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு [^] முஸ்லீ்ம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயாலளர் ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொருளாளர் ரஹமதுல்லாஹ், மனித நேயக் கட்சியின் பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்துப் பேசினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் இணைவது குறித்தும், எத்தனை இடங்கள் தரப்படும் என்பது குறித்தும் அதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி பேசியுள்ளதாக கருதப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது போக சில குட்டிக் கட்சிகளும் உள்ளன. இவற்றின் வரிசையில் புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெறவுள்ளன.
Thatstamil.oneindia.in வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 6, 2010, 9:14[IST]
மனித நேய மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணையவுள்ளது. நேற்று இதுதொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சட்டசபைத் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது. முதல் கட்டமாக கூட்டணியை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இறங்கியுள்ளார்.
இதையடுத்து சமீபத்தில் புதிய தமிழகம் [^] கட்சி அதிமுககூட்டணிக்கு வந்து சேர்ந்தது. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப் பேசினார். அப்போது எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாஹ் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு [^] முஸ்லீ்ம் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயாலளர் ஹைதர் அலி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொருளாளர் ரஹமதுல்லாஹ், மனித நேயக் கட்சியின் பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் ஜெயலலிதாவை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்துப் பேசினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் இணைவது குறித்தும், எத்தனை இடங்கள் தரப்படும் என்பது குறித்தும் அதிமுகவுடன் மனித நேய மக்கள் கட்சி பேசியுள்ளதாக கருதப்படுகிறது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது போக சில குட்டிக் கட்சிகளும் உள்ளன. இவற்றின் வரிசையில் புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெறவுள்ளன.
Thatstamil.oneindia.in வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 6, 2010, 9:14[IST]
Wednesday, August 4, 2010
India Chases Sri Lanka Score
இலங்கையுடனான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து, 180 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் 97 ரன்களுடனும், சச்சின் டெண்டுல்கர் 40 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
முன்னதாக முரளி விஜய் 14, ராகுல் டிராவிட் 23 ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் மலிங்காவும் மெண்டிசும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இலங்கையின் ஸ்கோரான 425 யை நோக்கி இந்திய அணி நாளையும் தொடர்ந்து ஆடுகிறது.
முன்னதாக முரளி விஜய் 14, ராகுல் டிராவிட் 23 ரன்களில் வெளியேறினர். இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் மலிங்காவும் மெண்டிசும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இலங்கையின் ஸ்கோரான 425 யை நோக்கி இந்திய அணி நாளையும் தொடர்ந்து ஆடுகிறது.
Subscribe to:
Posts (Atom)