என் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை : ஐயோ பாவம் சுப்பிரமணியசாமி!
August 11, 2010 15:48:51
என்னுடைய ஜனதா கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லை!' என அதன் தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
'நக்சல்தீவிரவாதிகள் மீது இந்திய அரசு இரக்கம் காட்டக்கூடாது. இப்பிரச்னைகளுக்கு அரசு விரைவாகத் தீர்வு காண வேண்டும்.
காஷ்மீருக்கு மாநில சுயாட்சி வழங்கப்போவதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.சுயாட்சி வழங்கினால் அங்கே தீவிரவாதிகள் தெம்படைவர். தீவிரவாதம் இன்னும் வளரும். எனவே மாநில சுயாட்சி வழங்கக்கூடாது.
தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்தும், இந்துத்துவத்தை வலியுறுத்தியும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது மக்கள் கையில் உள்ளது. தற்போது நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. ஜனவரி 14 ஆம் தேதிக்குப் பிறகு எங்கள் கட்சியின் நிலைப் பற்றி அறிவிப்போம்' என்று கூறியுள்ளனர்.
-சிவாஜி டிவி
No comments:
Post a Comment